கரூர்:”கரூர் மாவட்டத்தில், 50 நீர்நிலைகளில் வண்டல், களிமண் ஆகியவற்றை கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து செல்ல, இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்,” என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.

பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 6,051 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடிக்காக மட்டும், 125 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு உள்ளன.

Previous articleபாதியில் நிற்கும் சாலை பணி விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்ப்பு
Next articleஉச்ச நீதிமன்றத்தில் வக்ப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது மத்திய அரசு பதில் மனு !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here