கரூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க

கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அரசப்பன் தலைமையில் நடைபெற்றது
இதில் கோவில்களை கட்டுவது அல்லது அந்த இடங்களை தன்வசமாக்கிக் கொள்ளுவது என்பது தமிழ்நாட்டில் மட்டும் 170-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

அவற்றில் ஒன்றுதான் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தநாதர் தர்கா இந்த தர்காவை அகற்றும் நோக்கத்தில் நிறைவேற்றிக் கொள்ள போடப்பட்டுள்ள சதித்திட்டம் தான் எனவும் திருப்பரங்குன்றம் மக்களிடம் பார்ப்பான இந்து மதவெறியூட்டி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஆர்எஸ்எஸ்,

பிஜேபி மதவெறி கும்பலின் சதி திட்டங்களை முறியடிக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.








