கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுக சுவாமி வெள்ளி மயில் வாகன திருவீதி உலா.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு
ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக இன்று இரவு வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகசாமி திருவீதி உலா நடைபெற்றது.








